உடனடிச்செய்திகள்
» திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்! தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!» 2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்! பெ. மணியரசன்» காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!ஐயா பெ. மணியரசன்» அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்» தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம் வெற்று ஆரவாரமே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!» பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்? பெ. மணியரசன்

Thursday, May 22, 2008

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை :: த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது


:: மண்ணின் மைந்தர்களுக்கே வேலை ::

த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது


திருச்சி, மே 20: திருச்சி "பெல்' நிறுவனத்தில் 80 சதம் தமிழர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி நடத்திய மறியலில் 35 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருச்சி "பெல்' ஆலை வாயிலை நோக்கி சுமார் 300 பேர் பேரணியாக எழுச்சியுடன் மறியலுக்குச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அனைவரும் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.


மறியலுக்கு போராட்டக் குழுத் தலைவர் தோழர் குழ. பால்ராசு தலைமை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் தோழர் பெ. மணியரசன் மறியலைத் தொடங்கி வைத்தார்.


மதிமுக சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவர் வேங்கூர் புலவர் க. முருகேசன் வாழ்த்திப் பேசினார்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச்செயலர் நா. வைகறை, கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத் தலைவர் கவித்துவன், செயலர் ராஜா ரகுநாதன் உள்ளிட்டோர் மறியலில் கலந்து கொண்டனர். முன்னதாக மறியலுக்கு அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இம்மறியலில் தமிழக முழுவதுமிருந்து த.தே.பொ.க. தோழர்கள் திரளாக கலந்து கொண்டனா.

"பெல்' ஆலை மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆலைகளிலும் ஆள்களைத் தேர்வு செய்யும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டங்கள்

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை! தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி,......

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT