உடனடிச்செய்திகள்
» திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்! தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!» 2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்! பெ. மணியரசன்» காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!ஐயா பெ. மணியரசன்» அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்» தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம் வெற்று ஆரவாரமே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!» பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்? பெ. மணியரசன்

Saturday, August 28, 2010

தஞ்சை பெரிய கோவிலுக்குள் ஆழ்குழாய் கிணறு வெட்டத் தடை!

தஞ்சை, 28.08.2010.
ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஆபத்து உண்டாக்கும் வேலையில் இந்தியத் தொல்லியல் துறையும், இந்து அறநிலையத் துறையும் இறங்கியுள்ளன. 

தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்; கோபுரம் அருகே 400 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு தோண்டினார்கள். பெரிய கோயில் கிணறு வற்றி விட்டது என்றும், பு+சைக்குத் தேவையான தண்ணீர் எடுக்க ஆகம விதிகளின் படி அந்த இடத்தில் தோண்டுவதாகவும் சொன்னார்கள். அவ்வாறு தோண்டுவது காலப் போக்கில் பெரிய கோயில் கட்டுமானத்திற்கு ஆபத்தை உண்டாக்கும்.

நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு ஆழ்குழாய்க்கு அடியில் குளம் போன்ற பெரிய பள்ளம் உருவாகிவிடும். அவ்வாறு வெற்றிடம் உருவானால் பாறை இல்லாத அப்பகுதியின் கீழ் அடுக்கில் உள்ள மணல் அந்தப் பள்ளத்தில் இறங்க, அதனால் அதற்கு மேலே உள்ள களிமண் அடுக்கு கீழே இறங்க அருகிலுள்ள கோபுர அடித்தளமும் கீழே இறங்கும். இதனால் கோபுரச் சுவர்களில் விரிசலும் வெடிப்பும் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறினார்கள்.

ஏற்கெனவே இதுபோன்ற பாதிப்பால்தான் திருவரங்கக் கோபரச் சுவரிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவரிலும் விரிசல்கள் ஏற்பட்டன என்றும் அவ்வல்லுநர்கள் கூறினார்கள். அண்மையில் ஆந்திரப் பரதேசம் திருக்காளத்தி கோயில் கோபுரம் சரிந்து மண்மேடானதும் கவனத்திற்குரியது.   

இச் செய்தி அறிந்ததும் 18.08.2010 முற்பகலில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு தலைவர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், பொருளாளர் தோழர் பழ. இராசேந்திரன், செயற்குழு உறுப்பனர்கள் திருவாளர்கள் சாமி கரிகாலன், திருக்குறள் மாரிமுத்து, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரா.சு. முனியாண்டி, பொதுக்குழு உறுப்பனர் தோழர் தெ. காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் தோழர் செந்திரல், த.தே.பொ.க. தோழர் இராமதாசு ஆகியோர் பெரிய கோயிலுக்குச் சென்று ஆழ்குழாய் தோண்டுவதைப் பார்த்தனர்.  

உடனடியாக அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகிய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் கொடுத்து ஆழ்குழாய் கிணறு தோண்டுவதைத் தடுத்து நிறுத்தும்படி கோரினர்.  அவர்கள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதைத் தடுத்து நிறுத்த மறுத்துவிட்டார்கள்.  அதன் பறகு அதைத் தடுக்கும்; படி தமிழக முதல்வரைக் கோரும் வேண்டுகோள் அடங்கிய சுவரொட்டிகள் உரிமை மீட்புக் குழு சார்பல் தஞ்சை நகரெங்கும் ஒட்டப்பட்டன. 19.08.2010 அன்று ஊடகங்களில் இச் செய்தி வந்தது.

அதன் பறகும் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நிறுத்தவில்லை.  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பல் அதன் தலைவர் திரு.சி.முருகேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வழக்கை மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் மற்றும் வழக்கறிஞர் அருணாசலம் ஆகியோர் நடத்தினர்.  வழக்கை அனுபமதிப்பது குறித்து 26.08.2010 அன்று முதல் நிலை விசாரணை நடந்தது.  வழக்கறிஞர் லஜபதி ராய் வாதத்தைக் கேட்டதும் உயர்நீதி மன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் போடப்படும் ஆழ்குழாய்க் கிணறு வேலையை உடனே நிறுத்தும் படியும், வேறு பணி எதுவும் அது தொடர்பாக செய்யக் கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்து ஆணையிட்டது. 

தஞ்சைப் பெரிய கோயில் என்ற தமிழர் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட உரிமை மீட்புக் குழுவைப் பலரும் பாராட்டினர். 
Tamil News 24x7 said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை http://writzy.com/tamil/ இல் இணைக்கவும்.

போராட்டங்கள்

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை! தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி,......

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT