உடனடிச்செய்திகள்
» திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்! தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!» 2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்! பெ. மணியரசன்» காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!ஐயா பெ. மணியரசன்» அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்» தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம் வெற்று ஆரவாரமே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!» பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்? பெ. மணியரசன்

Tuesday, January 31, 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் - த.தே.பொ.க. கண்டனம்!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!

 

கூடங்குளம் அணு உலைக் குறித்து அரசு அமைத்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் நடந்துள்ளது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

இந்து முன்னணியினரும், காங்கிரசுக் கட்சியை சேர்ந்த சிலரும் சேர்ந்துகொண்டு இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரும், தமிழக  அரசு அமைத்த பேச்சு வார்த்தைக் குழுவின் உறுப்பினருமான புஸ்பராயன் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

 

அணுஉலை ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளிகளுக்கும் வன்முறை மோதல் நடப்பதாகக் காட்டி, அமைதிவழிப் போராட்டத்தை சீர்குலைக்க இந்தியஅரசு செய்கிற திட்டமிட்ட சதி இது. பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு அதே நேரத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அணுஉலை ஆதரவாளர்களையும் அனுமதித்தது தமிழகக் காவல்துறையின் இரட்டை அணுகுமுறையைக் காட்டுகிறது.

 

காங்கிரசுக் கட்சி வரும் பிப்ரவரி 4-ஆம் நாள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கான அடித்தள மாநாடு என்று அழைத்திருப்பதும் இச்சதித்திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

 

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையை ஏவி கூடங்குளம் - இடிந்தகரை பகுதியிலிருந்து போராடும் மக்களை வன்முறை மூலம் கலைக்கும் சதித்திட்டம் இதில் உள்ளது. அதற்கான முன்னோட்டமே இன்று (31.1.2012 அன்று) கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.

 

இப்போராட்ட்த்தை கிருத்தவர்களின் மதப்போராட்டமாகக் காட்டி பிளவுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்துமுன்னணி களமிறங்கியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான புஸ்பராயன் மற்றும் போராட்டக் குழுவினர் மீது இந்துமுன்னணியினரை தாக்கியதாகப் போய் வழக்குப் போடப்பட்டுள்ளதானது தமிழக காவல்துறையின் இரட்டை நிலையைக் காட்டுகிறது.

 

போராட்டக் குழுவினர் மீது நடத்தப்பட்டுள்ள கொடூந்தாக்குதலை கண்டிப்பதோடு புஸ்பராயன் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை திரும்பப் பெறுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்திய அரசும், இந்து முன்னணியும் மேற்கொண்டுள்ள இச்சீர்குலைவு முயற்சிகளை முறியடித்து, கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்தை தமிழகம் தழுவியப் போராட்டமாக தமிழ் இனத்தின் தற்காப்புப் போராட்டமாக பரந்த அளவில் நடத்த தமிழக மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

தமிழினத்தை அளிக்கும் கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடவேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை தமிழகஅரசு வலுவாக ஆதரிக்க வேண்டும் எனவும், அணு உலையை மூடுமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்

 கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

இடம்: சிதம்பரம்



போராட்டங்கள்

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை! தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி,......

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT